நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா – அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்!

Published by
Rebekal

நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா முரளிதரன், அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் 800 எனும் தலைப்பில் திரைப்படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பான கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், முத்தையா முரளிதரன் இலங்கையில் தமிழர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் தனக்கு மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதால் இவரது வார்த்தைக்கு பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என உலகெங்கிலும் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வரக் கூடிய நிலையில் விரைவில் இது குறித்து விஜய் சேதுபதி நல்ல கருத்துகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான ராமசாமி என்பவர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், ஒரு நல்ல மனிதன் எனும் இடத்தை விட்டுக் கொடுத்தவர். அதாவது நல்ல மனிதராக தோல்வி அடைந்து விட்டார். அதனால் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதுக்கு சமம் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலவற்றிலும் வரவேற்பு பெற்று வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago