சர்தாருக்கு பிறகே முத்தையா படம் .! கார்த்தியின் மாஸ்டர் பிளான்.!

Default Image

சர்தாருக்கு பிறகே இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார். 

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முத்தையா இயக்கும் படத்தை முடித்த பின் மீண்டும் சர்தார் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, நடிகர் கார்த்தி அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, சர்தார்  படத்தில் நடித்துவிட்டு முத்தையா இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. முத்தையா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் எனவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது. ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்