நினைத்த காரியம் நிறைவேற வடிவேலனை வீட்டில் இவ்வாறு பூஜை செய்தலே போதும்!

Published by
மணிகண்டன்
  • அசுரனை அழிப்பதற்காக பார்வதி அம்மன் தனது சக்திகளை பயன்படுத்தி உருவாக்கிய வேலாயுதத்தை முருகனுக்கு கொடுத்திருந்தார்.
  • அப்படி சக்திவாய்ந்த வேலை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாலே நன்மை பல பெருகும்.

வேலுண்டு வினையில்லை

மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையுமில்லை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி அசுரனை அழிப்பதற்காக முருகனுக்கு கொடுத்த ஆயுதமே இந்த வேல். நம் வாழ்வில் அனைத்து துன்பங்களையும் போக்கும் வல்லமை கொண்டது வேல். அப்படிப்பட்ட வேலை எப்படி பூஜை செய்து அதன் பலன்களை பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.

அருகில் உள்ள ஏதேனும் முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று அங்கு பஞ்சலோக வேலை வாங்கி வந்து நமது வீட்டு பூஜை அறையில் சிகப்பு துணி விரித்து, அதன்மேல் செம்பு கிண்ணத்தை வைத்து, அதற்குள் தூய பச்சரிசியை வைத்து அந்த செம்பில் வேலை சொருகி வைக்க வேண்டும்.  ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வேலிற்க்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர், பால் மற்றும் தூய தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

 

அதன் பின்னர், தூய துணியால் துடைத்துவிட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, பன்னீர் ரோஜா பூக்களால் பூஜையை தொடங்க வேண்டும். நைவேத்திய பொருட்களான பொரி, கற்கண்டு, பழம்  போன்ற பொருட்களை வைத்து பூஜை தொடங்க வேண்டும். ஊதுவத்தி, தீபாராதனை காண்பித்து கந்தசஷ்டிகவசம் அல்லது முருகன் துதி பாடும் பாடல்களை பாடி பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் பூஜை செய்தால் நமக்கு எண்ணற்ற பாக்கியம் கிடைக்கும். தீராத பிரச்சனைகள் தீரும். திருமண தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீண்டகாலமாக வராமலிருந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். எண்ணற்ற பலன்கள் இந்த பூஜை மூலம் நமக்கு கிடைக்கும்.

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

11 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

12 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

12 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

13 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

14 hours ago