வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையுமில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி அசுரனை அழிப்பதற்காக முருகனுக்கு கொடுத்த ஆயுதமே இந்த வேல். நம் வாழ்வில் அனைத்து துன்பங்களையும் போக்கும் வல்லமை கொண்டது வேல். அப்படிப்பட்ட வேலை எப்படி பூஜை செய்து அதன் பலன்களை பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.
அருகில் உள்ள ஏதேனும் முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று அங்கு பஞ்சலோக வேலை வாங்கி வந்து நமது வீட்டு பூஜை அறையில் சிகப்பு துணி விரித்து, அதன்மேல் செம்பு கிண்ணத்தை வைத்து, அதற்குள் தூய பச்சரிசியை வைத்து அந்த செம்பில் வேலை சொருகி வைக்க வேண்டும். ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வேலிற்க்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர், பால் மற்றும் தூய தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், தூய துணியால் துடைத்துவிட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, பன்னீர் ரோஜா பூக்களால் பூஜையை தொடங்க வேண்டும். நைவேத்திய பொருட்களான பொரி, கற்கண்டு, பழம் போன்ற பொருட்களை வைத்து பூஜை தொடங்க வேண்டும். ஊதுவத்தி, தீபாராதனை காண்பித்து கந்தசஷ்டிகவசம் அல்லது முருகன் துதி பாடும் பாடல்களை பாடி பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் பூஜை செய்தால் நமக்கு எண்ணற்ற பாக்கியம் கிடைக்கும். தீராத பிரச்சனைகள் தீரும். திருமண தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீண்டகாலமாக வராமலிருந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். எண்ணற்ற பலன்கள் இந்த பூஜை மூலம் நமக்கு கிடைக்கும்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…