இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 17-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது .டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தது.மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 67 ரன்கள், இஷான் 31 ரன்கள்,ஹர்டிக் 28 ,பொல்லார்ட் 25 *ரன்கள் அடித்தார்கள். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சந்தீப் ,கவுல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டோவ் ஜோடி சிறப்பாக விளையாடியது.ஆனால் பைர்ஸ்டோவ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வார்னர் மற்றும் பாண்டே ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்தது.பாண்டேவும் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 3 ரன்களிலும் ,கர்க் 8 ரன்களிலும்,அபிஷேக் 10 ரன்களிலும் ,சமத் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே அடித்தது.களத்தில் ரசித் கான் 3 * ரன்களுடனும் , சந்தீப் ரன் எதுவும் எடுக்காமலும் இருந்தார். மும்பை அணியின் பந்துவீச்சில் போல்ட்,பேட்டின்சன் ,பும்ரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதன் மூலம் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.தோல்வியடைந்த ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…