யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி…!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில், முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019-இல் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு திடீரென்று நினைவு ஸ்தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தமிழர்கள் பகுதியில் போராட்டம் வெடித்த நிலையில், நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ஜனவரி 11-ஆம் தேதி அதே இடத்தில் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025