கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தாய்! ஒரு மாதத்திற்கு பின் தாயை பார்த்த சிறுமியின் கதறல்!

Default Image

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், துருக்கியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் பாலிகிளினிக் ஒன்றில், ஓஸ்கி கொக்கேக் என்பவர் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒருமாத காலமாக கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவர் தனது 6 வயது மகள் ஒய்குவை தனது பாட்டி வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தனது மகளுடன் நேரத்தை செலவளிக்க முடிவெடுத்த ஒஸ்கி, தனது மகளை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவரை பார்த்த அவரது மகள், காட்டி அணைத்து  கதறியுள்ளார். இவர்களது பாசப்பிணைப்பு காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்