ரஷ்யாவில் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்ததால் பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
ரஷ்யாவில் 25 வயதுடைய வோல்கா பஜிராவோ என்ற பெண், கணவரிடமிருந்து பிரிந்து தன் 2 குழந்தைகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். வோல்கா நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 4 நாட்கள் குழந்தைகளை பட்டினியாக்கியுள்ளார். இவருக்கு 11 மாத செவாலி என்ற மகனும், 3 வயது மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து பூட்டி சிறையிட்டுள்ளார்.
விருந்தை முடித்து திரும்பிய வோல்கா, வீட்டில் இருந்த தொட்டிலில் பட்டினியால் 11 மாத குழந்தை இறந்ததை பார்த்துள்ளார். 3 வயது மகளும் பசியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை பார்த்து மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரஷ்ய நீதிமன்றத்தில் வோல்கா தனக்கு குழந்தைகளை கொல்லும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய நீதிமன்றம் குழந்தையை கொன்றதற்காகவும், தாயின் கடமையை செய்ய தவறியதற்கும் வோல்காவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து வோல்காவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…