பிரித்தானியாவின் தலை நகரமான லண்டனை சேர்ந்தவர் லாரன் வால் ஆவார்.தற்போது 34 வயதான இவர் 19 வயது இருக்கும் போது பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பால் ஒயிட் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.லாரனுக்கு தந்தை இல்லாதன் காரணமாக இவரின் திருமணத்தை தாய் ஜூலி 15,000 பவுண்ட் செலவு செய்து திருமணத்தை நடத்தியுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு லாரனும் அவரது கணவர் பால் ஒயிட்டும் தேனிலவிற்காக தேவோன் பகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.ஆனால் வீட்டில் தனது தாய் மட்டும் தனியாக இருப்பார் என்று எண்ணிய லாரன் அவரையும் அழைத்துள்ளார்.
முதலில் வர மறுத்துள்ள அவரின் தாயார் ஜூலி பின்னர் வர ஒத்துக்கொண்டுள்ளார்.தேனிலவு சென்ற இடத்தில் தனது அம்மாவும் கணவரும் பேசிக்கொள்வதை பார்த்த லாரன் இந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதுடன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் தேனிலவு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் லாரனின் சகோதரி அவரின் தாயார் ஜூலியின் மொபைல் போனை எடுத்து பார்த்துள்ளார்.அதில் ஜூலி பாலுடன் ஆபாசமாக பேசிய உரையாடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் லாரானிடம் கூறியுள்ளார்.லாரன் அவரது கணவர் பாலிடம் இது குறித்து கேட்டுள்ளார்.ஆனால் பால் எந்த ஒரு சரியான பதிலும் கூறாமல் மோதிரத்தை கழற்றி எறிந்துவிட்டு மாமியாரான ஜூலி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஜூலி 9 மாதங்கள் கழித்து குழந்தை பேற்றெடுக்க இருவரும் தமக்கு துரோகம் செய்து விட்டதாக 5 வருடங்கள் கழித்து லாரன் இணையத்தில் தெரிவித்துள்ளார். ஜூலி லாரனுக்கு போன் செய்து எனக்கு கல்யாணம் வந்துவிடு என்று கூறியுள்ளார்.
பாலுக்கும் லாரனுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.ஆனால் 2009-ம் ஆண்டு பாலும் ஜூலியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.லாரன் அவரது மகளின் எதிர்காலத்தை எண்ணி அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
நான் தப்பு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று ஜூலி லாரனிடம் பல முறை கூறியுள்ளார்.ஆனால் லாரன் அதை ஏற்க மறுத்துள்ளார்.ஆனால் பால் அவரிடம் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் வாழ்க்கை துணையாக வேறொருவரை நாடியுள்ளதாவும் இப்பதான் அவர் கொஞ்சம் மகிச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.இருந்தாலும் இந்த வேதனையை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…