காலை உணவுகளை தவிர்ப்பதால் உண்டாகும் பேராபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?!

Published by
மணிகண்டன்

நமது உடலுக்கு குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் அவசியம். இரவு சாப்பிட்டுவிட்டு காலை சாப்பாட்டுக்கு இடையில் நமது உடல் சுமார் 11 மணி நேரம் உணவின்றி இருக்கிறது. மீண்டும் காலை முதல் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு இன்றியமையாதது. ஆனால், சிலரோ தங்கள் டயட் இருப்பதாக கூறி உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவுகளை சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். சிலர் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். அதனால், நமது உடலுக்கு தேவையில்லாத பல பிரச்சனைகள் வரும். அதில் முதலில் பாதிக்கப்படுவது நமது இருதயம். காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் இதய கோளாறு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உண்டாகும் அபாயம் இருக்கிறது.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் பெண்களுக்கு நீரிழிவு நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகின்றன.
காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையும் என நினைத்தால் அது உங்கள் அறியாமை. காலை உணவை தவிர்ப்பதால் எடைகூடும். அதாவது, காலை உணவை தவிர்ப்பதால் நமது உடலில் பசியின்  தாக்கம் அதிகமாக இருக்கும். ஆதலால், மதிய இடைவேளையில் நாம் எப்போதும் சாப்பிடும் அளவிற்கு அதிகமாகவே சாப்பிடுவோம். அதனால் நமது உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காலை நாம் சுறுசுறுப்புடன் செயல்பட காலை உணவு அவசியம். அதனை தவிர்ப்பதால் மூளைக்கு சரியான சத்துகள் செல்லாமல், அதன் செயல்திறன் குறைவு ஏற்பட்டு நமது அன்றைய செயல் சோம்பேறித்தனமாக மாறிவிடுகிறது.
காலை உணவை தவிர்ப்பதால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. மேலும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை மிகவும் பாதிக்கிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago