இறுதி சடங்கில் அறிமுகமில்லாத 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆறுதல் !

Default Image

கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலில் 20 பேர் இறந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் பாஸ்கோ என்பவரின் மனைவி மார்ஜி (63) இழந்தார். பாஸ்கோவிற்கு  உறவினர்கள் அதிகம் இல்லை எனவும் , மனைவி  இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க யாரும் இருக்கமாட்டார்கள் என மனம் வருந்தினார். இந்த தகவலை இறுதி சடங்கு நடத்தும் அமைப்பு தங்களுடைய பேஸ்புக்கில் பதிவிட்டது.

இதை தொடர்ந்து பாஸ்கோவின் மனைவி இறுதி சடங்கில்700-க்கும் மேற்பட்டோர் அறிமுகமில்லாதவர்கள்  நேரில் சந்தித்து பாஸ்கோவிற்கு ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்