அமெரிக்காவில் கொரோனாவின் கொடூர தாக்குதலில் 45,000-க்கும் மேலானோர் பலி! ஒரே வாரத்தில் பலி எண்ணிக்கை இரட்டிப்பு!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா  நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோயானது பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும், அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும்,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா.  இந்நிலையில்,அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ் நோயால் 819,164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 45,340 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிழப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்