#Monkeypox: குரங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு (WHN).

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் (Monkeypox) என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று இன்னும் முழுவதும் ஒழியாமல் இருக்கு நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் வேகமாகா பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, தோல் அலர்ஜி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகள் என கூறப்படுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 58 நாடுகளில் பரவியுள்ள வைரசால் 3,417 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அதாவது அவசர கால நிலையாக உலக சுகாதார வலையமைப்பு (World Health Network) அறிவித்துள்ளது.

WHN அறிவிப்பு, நேற்று நடைபெற்ற WHO கூட்டத்திற்கு முன்னதாக குரங்கு பாக்ஸ் ஒரு தொற்று நோயாக தீர்மானித்துள்ளது. ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை இல்லாமல் இந்த தொற்று பரவல் நிற்காது என கூறியுள்ளது. பெரியம்மை நோயை விட இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மில்லியன் கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள், மேலும் பலர் பார்வையற்றவர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் மாறுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பரவலான பாதிப்பைத் தடுக்க பல நாடுகளில் அல்லது உலகம் முழுவதிலும் ஒருங்கிணைந்த முயற்சியை அடைவதே குரங்கு பாக்ஸை ஒரு தொற்றுநோயாக அறிவிப்பதன் இன்றியமையாத நோக்கமாகும் என்று WHN கூறியது. குரங்கு நோய் தொற்று மேலும் வளரும் வரை காத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்போது செயல்பட சிறந்த நேரம். உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், குறைந்த முயற்சியில் பரவலை கட்டுப்படுத்தலாம். மேலும் விளைவுகளை மோசமாக்குவதைத் தடுக்கலாம் WHN இன் இணை நிறுவனருமான யானீர் பார்-யாம் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

37 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

39 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago