பிரபல நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல்.! 4 இளைஞர்கள் கைது.!

Default Image

பிரபல நடிகையான பூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. அதனையடுத்து தமிழ் உட்பட பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் பூர்ணாவிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் பூர்ணா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டியதோடு, அவரது புகைப்படங்களை எடுக்க வீட்டின் அருகே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் செய்ததை அடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகையிடமே பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
vaibhavsuryavanshi
Zipline operator
Ajith Kumar Pahalgam attack
Rajasthan Royals WON
Vaibhav Suryavanshi