எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் பணமே தங்க மாட்டிங்கிதா!!?புலம்பாதீங்க இதை செய்யுங்க.!

Default Image

வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் அது தங்கமாட்டிங்குது..வந்த உடனே செலவு அதிகமாகுதே தவிர குறையல..என்ன தான் செய்வது ஒரு வேலை எந்த வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும்  ஜோசியரை போய் பார்க்கலாமா? என்று புலம்புபவர்கள் தற்போது அதிகமாகி உள்ளனர்.எதற்காக இப்படிவாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..

சொந்த வீட்டில் குடியுள்ளவர்கள் என்றால் எப்படி மாற்ற முடியும்.ஒருவருடைய வீட்டில் செல்வம் தங்காமல் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை அதிகமாக உள்ளது தான் காரணம் என்று  வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடி தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?

ஒருவரின் வீட்டின் லட்சுமி கடாட்சம் என்றால் அது பூஜை அறையில் தான். நமது வீட்டுப் பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பூஜை அறையில் நாம் வைத்த சுவாமியின் சிலைகள் அல்லது புகைப்படங்களை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகள் எதிரெதிரே பார்த்தவாறு  வைக்க கூடாது. இதனால் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறைந்துவிடும்.மேலும் வீட்டில் உடைந்த கண்ணாடி ,விரிசல் அடைந்த கண்ணாடி இவைகளை வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் நிதி சிக்கல்களை ஏற்படுதும்.சேதமடைந்த சாமி சிலைகள்,கிழிந்த சுவாமியின் புகைப்படங்கள் மடித்து வைப்பத்து பத்திர படுத்த்தி ஒரு இடத்தில்வைக்க கூடாது.காரணம் இவைகள் வீட்டின் பொருளாதார பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும். பழுதடைந்த பொருட்களைக் கடையில் போட மனமில்லாமல் பரனில் சிலர் போட்டு வைப்பார்கள் அவ்வாறு வைக்கக்கூடாது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் நமது வீட்டில் இவைகள் எல்லாம் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.எதிர்மறை ஆற்றல் இருந்தால் நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்காது இதன் காரணமாகவே உழைத்த பணம் கூட வீட்டில் தங்காமல் போகிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்