இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது மனைவி மேலும் ஒரு பகீர் புகார்!

Default Image

ஹசின் ஜஹான் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி, தன்னை அவரது சகோதரரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக  புதிய பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். பல்வேறு பெண்களுடன் ஷமிக்கு தகாத உறவு இருப்பதாகவும், தட்டிக் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், ஷமி மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஷமி மீது மேலும் ஒரு பரபரப்பு புகாரை ஜஹான் கூறி உள்ளார். வீட்டில் ஒரு அறையில் ஷமியின் சகோதரர் ஹசிப் இருந்த போது, அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தம்மை, ஷமி இழுத்து அறைக்குள் தள்ளி பூட்டியதாகவும், அந்த சமயம் ஹசிப் தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஷமிக்கு நிச்சயம் பாடம் கற்பிக்க போவதாகவும் ஜஹான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்