இந்திய வீரர் முகமது ஷமி மீது கொல்கத்தா போலீஸில் புகார்!

Default Image

காவல் நிலையத்தில் இந்திய  வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி  ஹசீன் ஜஹான் கொல்கத்தா  புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா லால்பஜார் காவல்நிலையத்தில் ஹசீன் ஜஹான் கொடுத்துள்ள புகாரில் முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை சித்திரவதை செய்வதாகவும், தாக்குவதாகவும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் மனைவிக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூட தனக்கு அளிப்பதில்லை என்றும் புகாரில் ஹசீன் கூறியுள்ளார். ஷமியின் குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஷமி, மற்ற பெண்களுடன் செய்துள்ள ஆபாச சேட்டிங்களின் ஸ்க்ரீன் ஷாட்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.  விரைவில் ஷமியை விசாரணைக்கு அழைக்க கொல்கத்தா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்