தனது 100-வது ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த மொயீன் அலி!

Default Image

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி , இலங்கை அணி மோதியது.  போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 212 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இங்கிலாந்து சுழற் பந்து வீச்சாளர் மொயீன் அலி பத்து ஓவர் வீசி 40 ரன்கள் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் வீசிய பத்து ஓவரில் ஒரு பவுண்டரி ,சிக்சர் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன்  2010-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 10 வீசி ஒரு ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை.
அதன் பிறகு உலகக்கோப்பை போட்டியில் 10 ஓவர் வீசி ஒரு பவுண்டரி  கூட கொடுக்காத வீரர் என்ற பெருமை பெற்றார். மேலும் மொயீன் அலிக்கு நேற்றைய போட்டிதான் 100-வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்