செல்லா ஓட்டு போட்ட MLA மற்றும் MPக்கள்….இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் நிலையா…?

Default Image

டெல்லி:கடந்த மாதம் நடந்து முடிந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் சுமார் 70 செல்லாத வாக்குகள் பதிவாகின. அதில், 21 செல்லாத வாக்குகள் பாஜக எம்.பிக்கள் போட்டது. இந்த செல்லாத வாக்குகள் விவகாரத்தில் கடும் கோபம் கொண்ட பிரதமர் மோடி மாதிரி ஓட்டு போடும் முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இன்று நடக்கும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலையொட்டி நேற்று ஒரு மாதிரி வாக்குபதிவை நடத்தியிருக்கிறது பிஜேபி கட்சியின் தலைமை,வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிலும் செல்லா ஓட்டுகள் 16 விழுந்திருக்கின்றன.இதனை கண்ட பிஜேபியின் தேசிய செயலாளர் அமித்ஷா கடிந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் நாளைக்காவது ஒழுங்கா போடுங்க என்று கண்டித்து கூறி அனுப்பினாராம் அமித்ஷா..இதனையெல்லாம் பார்க்கும்பொது நகைப்பாக கூட நினைக்க தோன்றும்,அதற்கு பதில் முழுநினைவோடு தான் மக்கள் இவர்களைத்தான் தேர்ந்தெடுத்து MLA மற்றும் MPயாக சட்டமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும் உட்கார வைத்தார்களோ…??  
என்று சிந்திக்க தவறிவிடாதீர்….
-சுரேஷ் இசக்கிபாண்டி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்