ஆங்கிலமொழியில் தேர்வா??அரசிற்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

Default Image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்  என அரசு அறிவித்தற்கு மு.க ஸ்டாலின்   கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மு.க ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவானது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துகின்ற திட்டமிட்ட சதியோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை  இளைஞர்களும், இந்த மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற வகையில் நடத்தப்படுன் ஆன்லைன் தேர்வினை  தமிழில் நடத்திட வேண்டும் தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்