டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் 15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 29 எம்.பி-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் 4 எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்த கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டம் நடைபெற்ற போது, கவுதம் கம்பீர் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு வர்ணனனையாளராக சென்றுள்ளார்.
இவரது இந்த செயலால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிரான ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டது. மேலும், மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கண்டத்திற்குரியது என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லி ஐடிஓ பகுதியில், ‘இவரை காணவில்லை யாராவது பார்த்தீர்களா? என்ற வாசகத்துடன், அவரது புகைபபடத்தையும் அச்சிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…