புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய படைப்பு மின்சார ஸ்கூட்டரான “மிசோவை” இந்தியாவில் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை ஓடும் மேலும் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை ஓடுமாம். மணிக்கு 25 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக இயங்கும் மிசோ, சிவப்பு, வானம் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த மினி மின்சார ஸ்கூட்டரை வருகின்ற ஜூலை முதல் அதன் 60 ஷோரூம்களில் மூலம் இந்தியா முழுவதும் வாங்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அனைத்து மிசோ வாடிக்கையாளர்களுக்கும் மூன்று ஆண்டு வரை இலவச சர்வீஸ் செய்து தரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மிசோ போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவும் மேலும் இந்த கொரோனா தொற்று நோயாலிருந்து பாதுகாக்க சவாரி தேர்வு செய்ய ஒரே ஒரு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒரு ஹெக்ஸா ஹெட் லைட்டுடன் கிடைக்கிறது.
இந்த மிசோவில் இரண்டு வகைகள் உள்ளது ஒன்று லக்கேஜ் கேரியருடன் 120 கிலோ சுமை வரை உள்ளது இனொன்று கேரியர் இல்லாமல் உள்ளது. ஜெமோபாய் மிசோவை அனைத்து முன் முன்பதிவுகளுக்கும் ரூ. 2,000 ஆரம்ப தள்ளுபடியுடன் வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டரின் முக்கியமான சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இதற்கு உரிமம் அல்லது ஆர்டிஓ அனுமதி எதுவும் தேவையில்லை.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…