சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் தான் கொரோனா உயிரிழப்புக்கு காரணம் – அதிபர் ஜோ பைடன்

Published by
லீனா

சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாக அமரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வல்லரசு நாடான அமெரிக்காவில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாகவும், இந்த தகவல்கள் தான் பலரது உயிரிழப்புக்கு காரணம் என்றும், வதந்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்க மருத்துவக் குழுவும், சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

28 minutes ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

54 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

1 hour ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

2 hours ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago