மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
தமிழகத்தை மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால் வடதமிழகம் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் கரையை கடக்கும் என்பதால் மழை தீவிரமடையும் இதனை ஒட்டி கனமழை முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து வந்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 206 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு எப்போதும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 400 மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. புயலின் காரணமாக மரம் விழுந்தால் அதனை அப்புறப்படுத்த ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். ,மீட்பு படையினர் 120 பேர் 3 குழுக்களாக செங்கல்பட்டில் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…