துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளதாகவும் ,அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதனிடையே இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை துணை அதிபர் மைக் பென்ஸ் செலுத்திக் கொள்ள உள்ளார்.மேலும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”அமெரிக்க மக்களிடையே கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கையை வளர்ப்பதற்காக” தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அதிபர் டிரம்ப் அமெரிக்கர்களை ஊக்குவிப்பார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…