திருச்சியில் திரையிடப்பட்ட எம்ஜிஆரின் ‘உரிமைக்குரல்’.! ஆர்வத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்.!

Published by
Ragi

திருச்சியில் 8 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பேலஸ் திரையரங்கில் எம்ஜிஆரின்’உரிமைக்குரல்’ படம் திரையிடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது . இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று கூறப்பட்டது . எனவே பல தியேட்டர்களில் பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது .

அதன்படி திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரையிடப்பட உள்ளது . அதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்டு களித்தனர் . மேலும் பேலஸ் திரையரங்கில் தெலுங்கு ரீமேக் படங்களை தீபாவளி முதல் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது .

திரையரங்குகளில் வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி டிக்கெட் வாங்கி கொண்டனர் .  அதனையடுத்து கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர் . திருச்சியில் பேலஸ் திரையரங்கை போன்று மேலும் 4 தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக பேலஸ் திரையரங்க உரிமையாளரான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

1 hour ago

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

3 hours ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

3 hours ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

4 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

5 hours ago