திருச்சியில் திரையிடப்பட்ட எம்ஜிஆரின் ‘உரிமைக்குரல்’.! ஆர்வத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்.!

திருச்சியில் 8 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பேலஸ் திரையரங்கில் எம்ஜிஆரின்’உரிமைக்குரல்’ படம் திரையிடப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது . இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று கூறப்பட்டது . எனவே பல தியேட்டர்களில் பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது .
அதன்படி திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரையிடப்பட உள்ளது . அதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்டு களித்தனர் . மேலும் பேலஸ் திரையரங்கில் தெலுங்கு ரீமேக் படங்களை தீபாவளி முதல் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது .
திரையரங்குகளில் வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி டிக்கெட் வாங்கி கொண்டனர் . அதனையடுத்து கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர் . திருச்சியில் பேலஸ் திரையரங்கை போன்று மேலும் 4 தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக பேலஸ் திரையரங்க உரிமையாளரான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025