1969-ல் பூமியில் விழுந்த விண்கல்..சூரிய மண்டலத்தின் வரலாறை கூறும் புதிய ஆராய்ச்சி.!

Default Image

1969-இல் பூமியில் விழுந்த விண்கல் காந்தத்தின் உதவியுடன் சூரிய மண்டலத்தின் வரலாற்றை ஒரு ஆய்வு கூறுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சூரிய குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் பற்றியும், பூமி போன்ற சில கிரகங்கள் ஏன் வாழ்விடமாக மாறியது மற்றும் உயிருக்கு உகந்த நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதையும் பற்றி விஞ்ஞானிகள் அறிய உதவும் தகவல்களை காந்தத்தின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது.

அதன்படி, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காந்தத்தன்மையைப் பயன்படுத்தி, கார்பனேசிய காண்டிரைட் விண்கற்கள் முதன்முதலில் உள் சூரிய மண்டலத்திற்குள் வந்தன என்று கண்டறிந்தன.

விண்கற்கள் மற்றும் அதன் முழு குடும்பம் பற்றியும் மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் அலெண்டே விண்கல்லிலிருந்து சேகரிக்கப்பட்ட காந்தத் தரவுகளை ஆய்வு செய்தனர். அது பூமியில் விழுந்து 1969 இல் மெக்சிகோவில் தரையிறங்கியது என தெரிய வந்துள்ளது.

அலெண்டே விண்கல் பூமியில் காணப்படும் மிகப்பெரிய கார்பனேசிய காண்டிரைட் விண்கல் மற்றும் சூரிய மண்டலத்தில் உருவாகும் முதல் திடப்பொருளாக கருதப்படும் தாதுக்களைக் கொண்டுள்ளது. டார்டுனோவும் அவரது குழுவும் 1969 இல் மெக்சிகோவில் தரையிறங்கிய அலெண்டே விண்கல்லிலிருந்து காந்தத் தரவை ஆய்வு செய்தனர். இது பூமியில் காணப்படும் மிகப்பெரிய கார்பனேசிய காண்டிரைட் விண்கல். தாதுக்கள் சூரிய மண்டலத்தின் முதல் திடப்பொருட்கள் என்று நம்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam