மே 30-ஆம் தேதி வானத்தை ஒளிரச் செய்யவுள்ள விண்கல் மழை! – விஞ்ஞானிகள் தகவல்

Default Image

வரும் 30-ஆம் தேதி இரவு முதல் 31 அதிகாலை வரை வானில் விண்கல் மழையை காணலாம் என விஞ்ஞானிகள் தகவல்.

சில நேரங்களில், வானியல் ஆச்சரியங்கள் நிறைந்ததாக காணப்படும். குறிப்பாக ஒரு சிறிய வால் நட்சத்திரத்தின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக இருக்கும். ஆனால் 1995- இல், அது திடீரென எதிர்பாராத விதமாகவும் பிரகாசமாகி வெறும்  கண்ணால் பார்த்ததாக தகவல் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு வருகின்ற மே 30-ஆம் தேதி விழவுள்ள விண்கல் மழை, வானத்தை ஒளிர செய்யும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிதைந்த வால் நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் விண்கற்களால் வரும் 30-ஆம் தேதி இரவு முதல் 31 அதிகாலை வரை வானில் விண்கல் மழையை காணலாம் என கூறியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு 60க்கும் மேற்பட்ட விண்கற்கள் பூமியை நோக்கி விழும் என்றும் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கற்கள் வெள்ளை, கருப்பு, பச்சை, நீளம் மற்றும் சிவப்பு நிறங்களில் பூமியை நோக்கி விழவுள்ளதாக கூறப்படுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, தெற்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் விண்கல் பொழிவு சிறந்த விகிதங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் வானிலை சரியானதாக இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் இருந்து 60 நிமிடங்களுக்கு 30 விண்கற்கள் வரை பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளது. விண்கற்கள் பொழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் வால்மீன்களின் துகள்களிலிருந்து வருகின்றன. வால்மீன் துகள்கள் வெப்பமடைந்து விண்கல் பொழிவின் போது நாம் காணும் “சுடும் நட்சத்திரங்களை” உருவாக்குகின்றன.

இது Tau Herculids விண்கல் மழை எனப்படும். Tau Herculid விண்கற்கள் 73P/Schwassmann Wachmann 3 எனப்படும் வால்மீனில் இருந்து வருபவை, இது 1930 ஆம் ஆண்டில் இரண்டு வானியலாளர்களான Schwassman மற்றும் Wachmann ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் கண்டுபிடித்த மூன்றாவது வால்மீன் இதுவாகும், எனவே வால்மீன் பெயர் SW3 என்று சுருக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1995 இல், SW3 வால் நட்சத்திரம் உடைய தொடங்கியது, இப்போது 60 துண்டுகளாக உள்ளது. இந்த 60 துண்டுகள் SW3 தொடர்பான விண்கல் பொழிவை, விண்கல் மழையாக இருப்பதற்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றன. Tau Herculid விண்கல் பொழிவின் போது நாம் எத்தனை விண்கற்களைப் பார்ப்போம் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள எந்த வழியும் இல்லை, ஆனால் விண்கல் மழை தீவிரமடையக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 60 விண்கற்கள் என ஒரு பெரிய விண்கல் மழையாக இருக்கும்.

ஒரு விண்கல் மழைக்கு அப்பால் ஒரு விண்கல் புயல் உள்ளது. ஒரு விண்கல் புயல் ஒரு மணி நேரத்திற்கு 200 விண்கற்களை கொண்டிருக்கும். அது சாத்தியம், ஆனால் அந்த இரவு வரை யாருக்கும் தெரியாது. மே 31 அன்று மதியம் 1 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் விண்கல் மழை உச்சம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே 30 இரவுக்கு இன்னும் ஒரு போனஸ் என்னவென்றால், சந்திரன் அமாவாசை கட்டத்தில் இருக்கும், மேலும் எந்த விண்கற்களையும் மறைக்க ஒளியை உருவாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்