மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற படத்தின் மூலம் கடந்தாண்டு அறிமுகமானார் மேகா. அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ராதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மேகா ஆகாஷ் தமிழில் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கும் ஒரு ஆந்தலாஜி படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளதாகவும், இதன் 4 நாட்களுக்கான படப்பிடிப்புகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைப்பெற்றதாக கூறியுள்ளார். ஏ. எல். விஜய் தற்போது தலைவி என்னும் திரைப்படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…