திரிஷாவிற்கே எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்.!

பிரபல நடிகை திரிஷாவிற்கு தன்னை போன்று ஆக நினைக்காதீர்கள் என்று கூறி மீரா மிதுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர். பிரபலங்களை வம்பிழுத்து பப்ளிசிட்டி தேடி வருவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது திரிஷாவின் செல்பி புகைப்படத்தை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திரிஷா இது உன்னுடைய கடைசி எச்சரிக்கை என்றும், அடுத்தமுறை என்னை போல் தோற்றத்தில் அல்லது என்னுடைய முடியை போன்று மார்பிங் செய்து என்னை போல் இருக்க வேண்டும் என்று நினைத்து போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வெளியிட்டால் சட்ட ரீதியாக பிரச்சினைகளை நேரிட ஆளாகுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.
Tis s gonna be my last warning to you @trishtrashers. Next time I see, you photoshop ur picture with features of mine including hair, morphing to, look like me, you will be under serious legal allegation . You know what ur doing, Well ur conscience knows. Grow Up! Get a Life.
— Meera Mitun (@meera_mitun) July 9, 2020