தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கபூர் தயாரிக்கும்,இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை குரேஷி நடிக்கிறார, மேலும் கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது, ஆம் சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக தல அஜித் தனது அடுத்த படத்தின் கதையை போன் கால் மூலம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிட தயாராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அஜித்திடம் ஒரு வெயிட்டான கதையை கூறி ஒகே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வலிமை படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…