என்ன பேச போகிறார்…ஆடியோ விழாவில்..உற்றுநோக்கும் கண்கள்!உற்சாகத்தில் ரசிகபடை!

Published by
kavitha

நடிகர் விஜய் நடிப்பில் ஒருவாகியுள்ள படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறகிறது. இதில் குட்டிகதை மூலம் விஜய் அரசியல் பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. 

காரணம்  நடிகர் விஜய்  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்குதான் அவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று பேசினார் அப்போது விஜயின் இந்த பேச்சு வைரலாக மாறியது. மேலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று விவாதங்களும் அனல் பறந்தன.

ImageImage

விஜய் ஆளுங்கட்சியை தான் கூறுகினார்  என்றும்,அவர் அரசியலுக்கு வருகிறார் என்று அரசியல் களங்களால் அப்போது கணிக்கப் பட்டன.தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

ImageImage

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி  உள்ள இந்தப் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக களமிரங்கியுள்ளார்,நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், நாசர் உள்ளிட்டோர் பல முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார். 

இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவானது விஜய்யின் முந்தைய படங்களைப் போல் இருக்காது என கூறப்படுகிறது.மேலும் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு கூட அனுமதி இல்லையாம், படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாக திட்டமிடப் பட்டுள்ளது.

நேற்று வெளியான “வாத்தி ரெய்டு பாடல்” வெளியானதை தொடர்ந்து  இவ்விழாவில், விஜய் என்ன பேசப் போகிறார் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. சமீப காலமாகவே தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில்  அரசியல் பேசும் விஜய் இந்த விழாவிலும் அரசியல் பேசுவாரா? என்று ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago