ஒரு மாதத்திற்கு பின் அமெரிக்காவில் பெருமளவில் குறைந்த உயிரிழப்பு!

கொரோனாவால் தொடர்ந்து 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து நிலையில், தற்போது பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
இந்நிலையில், நாடுகளையும் பொறுத்தவரையில், பலியானோரின் எண்ணிக்கை விகிதமும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விகிதத்திலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு நாளும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு 1,157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை இதற்க்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது, குறைவான பலி எண்ணிக்கை தான்.