திருப்பரங்குன்றம் கீழரத வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் ஆனது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலாகும்.ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழாவானது பிப்., 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவிலுக்கு மேளதாளம் முழங்க தயார் அங்காள பரமேஸ்வரி புறப்பட்டு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தன் அருள்பார்வையால் ஆசிர்வதித்தார்.
இதன்பின் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான பாரிவேட்டை நேற்று நடைபெற்றது.
இந்த வேட்டைக்காக கிரிவலப்பாதையில் உள்ள காட்டு பேச்சியம்மன்கோவிலுக்கு பூப்பல்லக்கில் தயார் அங்காளபரமேஸ்வரி புறப்பட்டுச் சென்றார். பின்னால் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வெண்கல மணியை அடித்தபடி வந்தனர். இதனால் கிரிவலப்பாதையே மணி ஓசையால் எதிர் ஒலித்தது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…