திருப்பரங்குன்றம் கீழரத வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் ஆனது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலாகும்.ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழாவானது பிப்., 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவிலுக்கு மேளதாளம் முழங்க தயார் அங்காள பரமேஸ்வரி புறப்பட்டு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தன் அருள்பார்வையால் ஆசிர்வதித்தார்.
இதன்பின் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான பாரிவேட்டை நேற்று நடைபெற்றது.
இந்த வேட்டைக்காக கிரிவலப்பாதையில் உள்ள காட்டு பேச்சியம்மன்கோவிலுக்கு பூப்பல்லக்கில் தயார் அங்காளபரமேஸ்வரி புறப்பட்டுச் சென்றார். பின்னால் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வெண்கல மணியை அடித்தபடி வந்தனர். இதனால் கிரிவலப்பாதையே மணி ஓசையால் எதிர் ஒலித்தது.
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…