#PriceHike:அனைத்து மாடல் கார்களின் விலை உயர்வு – மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

Published by
Edison

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து  கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9  சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த ஆண்டில்,பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால்,நிறுவனத்தின் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டது.எனவே,விலை உயர்வின் மூலம் கூடுதல் செலவினங்களின் சில பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இன்றியமையாததாகி விட்டது’,என்று கூறியிருந்தது. இந்நிலையில்,தற்போது அனைத்து மாடல் கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது.

உள்ளீடு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஏற்கனவே ஜனவரி 2021 முதல் மார்ச் 2022 வரை வாகன விலைகளை சுமார் 8.8 சதவீதம் மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில்,கடந்த வாரம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.63,000 வரை விலையை உயர்த்தியது.அதைப்போல்,டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஏப்ரல் 1 முதல் அதன் மொத்த மாடல்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவையும் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

13 minutes ago

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

8 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

9 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

10 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

10 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

13 hours ago