மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை – துஷாரா விஜயன்.!

Default Image

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இந்த படத்தில் தனது நடிப்பால் அனைவரும் கவர்ந்ததால் பலர் இவரை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது  ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பை அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் சாருக்கு என் அன்பான நன்றி. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இத்தனை நாட்கள் இதுபோன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் காத்திருந்தேன். சார்பட்டா படத்தில் அது நடந்துள்ளது. முதலில் ரஞ்சித் சார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தபோது, நான் யாரோ என்னை கால் செய்து பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து போனை வைத்துவிட்டேன். அதன் பிறகு அந்த எண்ணிலிருந்து 17 முறை கால் வந்தது. உடனடியாக ரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

அதற்கு ரஞ்சித் சார் மிகவும் பணிவாக நடந்துகொண்டார் கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். என்னை ஒரு காட்சியை நடித்து காட்ட சொன்னார். அவருக்கு இந்தப் பாத்திரத்தை செய்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போட்டோஷூட் நடத்திய பிறகு, நான் அழகாக பொருந்தியிருப்பதாக நம்பினார். டம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan