திருமணத்தடையை உடைத்தெரியும் திருபள்ளியெழுச்சி

Default Image
  • திருமணத்தடையை  திருபள்ளியெழுச்சி  நீக்குகிறது.
  • பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய ஆன்மீகத் தகவலை தெரிந்து கொள்வோம்.

காக்கும் கடவுள் என்று அழைக்கபடுபவர் விஷ்ணு பரமாத்மா இவர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறி மார்கழி மாதத்திற்கு சிறப்பினை அளித்தவர்.மார்கழி மாதம் ஆன்மீக ரீதியில் மிகவும் புனிதம் மிகுந்த ஒரு மாதமும் மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதையே குறிக்கோளாக கொண்டது.

இந்த மாதத்தில் அதிகமாக கன்னிப்பெண்கள் நோன்பு வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.இதனை தொடங்கி வைத்தவர் அந்த சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாக அருட்ளாட்சி தரும் ஆண்டாள் தான்  திருமாலை எண்ணி மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வழிபட்டு இறைவனை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

ஒரு சிலருக்கு நீண்ட காலமாக கல்யாணம் முடியமால் இருக்கும் மற்றும் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும்,பிரச்சணையும் உருவாக்கும்.இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஆண்டாளின் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றினை விரதம் இருந்து பாடி வழிபட வேண்டும்.அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று நடராஜர் வழிபாட்டினை மேற்கொள்வது இனிய வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்