மார்கழி மாதம் நாம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம். அதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது. ஆன்மிக ரீதியாக தேவலோகத்தின் விடியற்காலை நேரம் தான் மார்கழிமாதம் . ஆதலால் நாம் மார்கழி மாதம் விடியற்காலையில் எழுந்து விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வேண்டுகையில், கடவுள் அதிகாலையில் பக்தர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுவார் எனபது ஐதீகம். அதனால் தான் பெரும்பாலானோர் மார்கழி மாதம் காலையில் கோவிலுக்கு செல்வதை வைத்துள்ளோம்.
அதேபோல, மார்கழி மாதம் வீட்டு கன்னிப்பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து பூசணி பூவை அதில் வைப்பார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது வீட்டில் உள்ள கன்னி பெண்கள் மட்டுமே முன் காலத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டு வந்தனர். உற்றார் உறவினர்கள் அதனை வைத்துதான் இந்த வீட்டில் கல்யாணம் ஆகாத கன்னி பெண் இருக்கிறாள் என கண்டறிந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்க செல்வார்களாம்.இந்த திருமணம் தை மாதம் கைகூடும் என்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் கூற வேண்டுமென்றால், மார்கழி மாதம் காற்றில் அதிகஅளவு ஆக்சிஜன் வாயு ஆனது அதிக அளவில் இருக்கும். அந்த மார்கழி மாதத்தில் விடியற்காலையில் எழுந்து காற்றில் உள்ள அதிகமான ஆக்ஸிஜனை சுவாசித்தால், அந்த ஒரு வருடத்திற்கான ஆக்சிஜனானது அந்த ஒரு மாதத்தில் கிடைத்துவிடுமாம். இதனால் முகப்பொலிவு இருக்குமாம். நம் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து அந்த சுத்தமான காற்றை சுவாசித்தால் அவர்கள் முகம் பொலிவுறும். மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தவுடன் பெண்ணை மிகவும் பிடித்துவிடுமாம். இதனால் திருமணம் கைகூடும்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…