ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…

Published by
கெளதம்

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கூறிய கருத்துக்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்கில் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், த்ரிஷா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இது ஒரு சரித்திர படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்காக நடிகை த்ரிஷா ரூ.12 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாகவும், தெலுங்கில் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க தான் ஒப்பந்தமாகி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் தெலுங்கில் கிடைத்த இந்த மாபெரும் வாய்ப்பை த்ரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி நடிகை த்ரிஷாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்?

சமீபத்தில், சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா நடிகையாக நடித்து வருகிறார் திரிஷா.

மன்சூர் அலிகான் சர்ச்சை

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைக்கு, அவர் மீது 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது.

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

முன்னதாக, த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

Recent Posts

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

2 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

18 hours ago