சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்களாக நடைபெறும் இந்த மண்டலபூஜை, இன்றுடன் நிறைவுபெறுகிறது.
தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் வருகைக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக்கொண்டு வந்த நிலையில், வார நாட்களில் 2,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 3,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம், ஆரனமுளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டு, நேற்று மதியம் பம்பை வந்தடைந்தது. அங்கிருந்து 3 மணிக்கு மீண்டும் ஊர்வலமாகப் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்து பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து தீப ஆராதனை நடைபெறும். அதனைதொடர்ந்து இன்று 11.40-12.20 இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்று, இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…