ஊரடங்கு நேரத்திலும் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்ட நபர்.. காவலர்கள் கொடுத்த அன்பு பரிசு!

Published by
Surya

இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர், ஊரடங்கு நேரத்தில் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்டு 160 கி.மீ. பயணித்தால் அந்நாட்டு போலீசார், 200 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19,926 வரை) அபராதம் விதித்து, அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், இங்கிலாந்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கில் பலரும் ஒரு நேர உணவுக்காக கஷ்டப்படும் நிலையில், லூட்டனை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர், McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்டார்.

அதற்காக அவர், தான் இருக்கும் லூட்டனில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு வழியில் ஏதாவது McDonald’s இருக்குமா என பார்த்துக்கொண்டே 160 கி.மீ. தொலைவில் இருக்கும் தேவிஜஸ் நகர் வரை வந்தடைந்தார். ஊரடங்கு நேரம் என்பதால், அங்கு வந்த அவரை வழிமறித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார். அப்பொழுது அவர் McDonald’s-ஐ தேடி வந்ததாக கூறினார். இதன்காரணமாக ஊரடங்கு விதிகளை மீறியதாக அவருக்கு 200 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19,926 வரை) அபராதம் விதித்து, அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

15 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago