பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று நேரம் செலவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு, லட்சத்தீவு, வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது, காலம் காலமாக நீடித்துவரும் பாரம்பர்ய மரபு, மக்களுக்கான சான்று. கற்கவும், வளர்வதற்குமான வாய்ப்பாக என் பயணம் அமைந்தது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

இதனை குறிப்பிட்டு, மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டனர். மாலத்தீவை போல லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்ற பிரதமர் மோடி முயல்கிறார் என அந்நாட்டு இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். அதே போல, மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோரும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பதிவு குறித்து விமர்சனம் செய்து இருந்தனர்.

பிரதமர் குறித்து அவதூறு கருத்து – மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் பதவி நீக்கம்..!

பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் விமர்சனங்களை அடுத்து மாலத்தீவு அரசாங்கம் மீதான எதிர்ப்பை இந்திய பிரபலங்கள் பலமாக பதிவிட்டனர். பல்வேறு திரைபிரபலங்கள் தங்கள் விடுமுறை தினத்தில் இளைப்பாற முதலில் தேர்வு செய்யும் இடமாக மாலத்தீவு இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தை அடுத்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மாலத்தீவு அரசின் பெரிய வருமானமே சுற்றுலாத்துறை தான்.அதிலும் இந்தியர்கள் தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர் என்பதால், தற்போது இந்த விவகாரம் அந்நாட்டிலேயே பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்து இருந்த 3 அமைச்சர்களை அந்நாட்டு அரசாங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சையான கருத்துக்கள் குறித்து அரசாங்கம் அறிந்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், தனிப்பட்ட கருத்துக்கள் என்றுமே நாட்டின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, மாலத்தீவின் நாடாளுமன்ற சிறுபான்மையின தலைவர் அலி அசிம் நேற்று மாலத்தீவு பேசுகையில், ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் நன்மதிப்பை நிலைநிறுத்துவதற்கும், அண்டை நாடுகளுடன் மாலத்தீவு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய பிரதமர் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததற்கு பொறுப்பேற்று அதிபர் முகமது முய்ஸுவை ஆட்சியில் இருந்து அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிறுபான்மையின தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி அசிம் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…

22 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

1 hour ago

இவர்களுக்கு மாதம் ரூ.2,000… பெண்களுக்கான முக்கிய திட்டங்கள் என்னென்ன?

சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…

2 hours ago

கல்வி கடன் ரத்து..ஓய்வூதியம்..? பட்ஜெட்டில் ஒன்னுமே புதுசா இல்ல – இபிஎஸ் காட்டம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…

2 hours ago

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

3 hours ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

3 hours ago