பிரதமர் குறித்து அவதூறு கருத்து – மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் பதவி நீக்கம்..!

Published by
murugan

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில்” இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என பதிவிட்டார்.

பிரதமர் மோடிக்கு இந்த பதிவிற்கு எதிராக சமூக ஊடகத்தில் மாலத்தீவு அமைச்சர்களாக உள்ள மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு  3 அமைச்சர்கள்  பதிவிட்டதற்கு இந்தியர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சையால் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து  செய்து வருகின்றனர். அதேபோல மாலத்தீவுக்குச் செல்ல புக் செய்யப்பட்ட  விமான டிக்கெட்களும் ரத்து செய்து வருகின்றனர். இதற்கிடையில் BoycottMaldives என்ற ஹேஸ்டேக்  இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி குறித்து அவர்கள் பேசியது  அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, இது அரசின் பார்வையல்ல என  மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. கடந்த நவம்பரில் மாலத்தீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு இந்தியா – மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago