பிச்சைக்காரன் பட இயக்குநருடன் இணைகிறாரா மக்கள் செல்வன்.!

Published by
Ragi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிரபல இயக்குநரான சசி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சசி. அதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லாக்டவுன் முடிந்ததும் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

15 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

4 hours ago