மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது!

Default Image

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது.

மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் மகளிருடன் கமலஹாசன் கலந்துரையாட உள்ளார். கூட்டம் நடைபெற உள்ள, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், சுமார் இரண்டாயிரத்து 500 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கு தயாராகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்