அன்னவாசலில் சோறு அளித்த சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார். அதில் பெப்சி தொழிலாளர்களின் நலனை கருதி முதலில் 10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியது சூர்யா என்பது அனைவரும் அறிந்ததே.
இது மட்டுமல்லாமல் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகிறார். தற்போது மதுரை எம்பியான வெங்கடேசன் ‘அன்னவாசல்’ என்ற திட்டம் மூலம் மதுரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மற்றும் பல பகுதிகளிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். இதற்கு பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அன்னவாசல் திட்டத்திற்காக ரூ. 5 லட்சத்தை நிதி யுதவியாக வழங்கியுள்ளார். இது குறித்து மதுரை எம்பியான வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நல்ல முன்னெடுப்புகள் பல நல்ல உள்ளங்களை ஒன்றிணைத்து கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறுட்ட அளித்த சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன் வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது சூர்யாவின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…