மடகஸ்கார் நாட்டில், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவித்துளளார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், கொரோனவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். தடுப்பு மருந்து கண்டறிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறுகின்றன.
இந்த கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் போட்டியில் கொரோனா கண்டறியப்பட்ட சீனாவும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா இந்த வருட இறுதிக்குள் கொரோனா மருந்து கிடைத்துவிடும் என அறிவித்துள்ளதால் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மீது உலக மக்கள் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் நாட்டில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மடகஸ்கார் அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவிக்கையில், ‘ மடகஸ்காரில் உள்ள ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது மலேரியாவை கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து தான் கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். மடகாஸ்கரில் இதுவரை 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. என தெரிவித்து. அந்த மருந்தையும் மேடையில் குடித்து காண்பித்துள்ளார்.
இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும், அந்நாட்டை சேர்ந்த மலகாசி மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இந்த மருந்தை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…