சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை நேற்று (வியாழக்கிழமை) வரை 118 பேர் உயிரிழந்து நாடு முழுவதும் 2236-ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 889 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 411 ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. இது கடந்த மூன்று நாள்களை விட மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த வைரசால் நாடு முழுவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,465-ஐ எட்டியுள்ளது என தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…