நடிகை சந்தியா சுமார் 4 வருடங்களுக்கு பிறகு சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகர் பரத்துடன் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. அதனையடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து 2015ல் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தியாவிற்கு ஷேமா வெங்கட் என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த விட்டு , கடந்த 4 ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் பூர்ணிமா பாக்கியராஜ், சஞ்சீவ், லீஷா, சாம்பவி குருமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த தொடரில் சந்தியா கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். அதற்கான புரோமோ வீடியோவை சன்டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…