சீன விண்வெளி ஆய்வு மையம் ‘லாங்க் மார்ச் 8’ என்ற புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீனா, லாங்க் மார்ச் 8 என்ற ஒரு புதிய ராக்கெட்டை உருவாகியுள்ளது. இந்த புதிய ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது.
இந்த புதிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சோதித்த நிலையில், 5 செயற்கைகோள்களுடன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் 50.3 மீட்டர் (165 அடி) நீளம் கொண்டது, 3.35 மீட்டர் விட்டம் கொண்ட மைய நிலை மற்றும் 2.25 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பக்க பூஸ்டர்களைக் கொண்டுள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவின் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான சீனா அகாடமி ஆஃப் லாஞ்ச் வாகன தொழில்நுட்பம் தான் லாங்க் மார்ச் தொடரின் ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த லாங் மார்ச் தொடரிலிருந்து சீனா 350 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இதுவரை ஏவியுள்ளது. புதிய லாங் மார்ச் -8 மாடல் “ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 இன் சீன பதிப்பு” என்று அழைக்கப்படுகிறது.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…